Monday, November 24, 2014

மீன் அவன்

கனவிருளோ , விட்டு  மெல்ல மெல்ல வேலகுது..
புது விடியல் , நிதம் புது பக்கமாவ மாறுது
ஏ புள்ள  பொஞ்சாதி , நான் கடலுக்குள்ள போவையிலே ,
பயந்தோடி , இப்போ நீ பழக்க பட்டுகிட்ட புள்ள ..!


கடலுக்குள்ள போவையில , கட்டுமரப்பாதையில
கட்டினவன் தாலியத்தான் , கையில் வெச்சு நிக்கும் புள்ள .!
கட்டினவ  கவலையெல்லாம் , கட்டுமரம் வீடு வர .
கடலே  கடவுளுன்னு, வேண்டிக்கிட்டு பொழப்ப பாக்குறோமே ..!

தேடி போகும் வாழ்க்கை இது , எல்லைகொண்ட தேடல் இது ,
எல்லை தாண்டி வல விரிச்சா ,சிக்குற மீன் அவன் தான்,
வரையறை இல் கட்டுப்பட்டு , நெறிமுறையா வலை விரிச்சும்.
விதிவகையில் வெறும் கய்யா பல முறைகள் திரும்பி வந்தோம்.

காத்தடி காலமுன்னா ,நாங்க காலொடஞ்சு போயிருவோம் ,
பேய்மழை  பொய்யாவத்தான், எல்லாரும் ஊர் கூடி வேண்டிருவோம் ..!
சுழக்கு காவுதந்து ,பதிலுக்கு மீனு தந்து ,
கடலோட போட்டியில வெற்றி தோல்வி மாற்றமுண்டு .
நடுக்கடல் பண்பாடு ,நாங்க மட்டும் தான் அறிஞ்சோம் .!
உசுர் கொடுத்து பசி தீக்கும் ,கடல் ஆதிகுடி நாங்க கண்டோம்,!

வலை மீனுக்கு நான் விரிக்கையிலே, கடல் எங்களுக்கு விரிகுதைய்யா ,
ஒரு பேரலையா மூழ்கடிச்சு , ஊர் ஓரம் ஓதிக்கிவிடும்
துப்பாக்கி எச்சில் பட்டு , கடல் தூர்வாரி எரிஞ்சுபுடும் ,
உசிர் விட்டு திரும்புறது மீனோ , இல்லை அவனோ,
ஒரு சீவன்ஏறப்புகுள்ள , ஒரு சீவன் பொழக்குதையா..!

இருளு வெலகுதைய்யாயாயா ,கடலு வெளுக்குதையா யா ..!
கண்ண தொறக்க சொல்லி ,பகலவரு வந்தாரயய்யயா ...!
நேரம் தவறாம ,  நெதம் பொழப்ப பாக்கச்சொல்லி ,
கடமை தவறாம ,நம்ம எழுப்ப வந்தாரய்யா ..!