Saturday, June 13, 2015

கடாரத்தில் கடவுள்.!

'வரிசையில் வரவும் ', 'சத்தம் போடாதீர் ' எனும் அட்டைகளுக்கு
அவசியம் இல்லாமல் வரிசையில் மௌனமாய் மக்கள் ,

ஆலயத் தூய்மை ஆண்டவன் சேவை என
கடல் கடந்த பின் உணர்ந்த குடிமகன்கள் ,

இலவச , கட்டண , சிறப்பு தரிசனங்கள் அறியாத
இந்நாட்டின்  சமய அறநிலைத் துறை ,


பளிங்குக் கற்களின் நடுவில் புன்னகைக்கிறான் கடாரத்தில் கடவுள் ,
புளியோதரை தேடும் புறாக்களை பார்த்து.!