Saturday, January 31, 2015

நாளை நமதே


வண்ணங்கள் இல்லை எந்தன் வாழ்வில் ,
    தினமும் நான் தோற்கிறேன் ...!!
காயங்கள் மட்டும் தான் கடவுள் வரமா ,
  புது உலகை எதிர்பார்க்கிறேன் ...!

கடவும் களவானதே ,
கனவுகள் இருளானதே ..!

தேடியே உதிர் சருகாகின்றேன் ,
அறிகிலேன் திசைகள் தான் .!


வண்ணங்கள் வாழ்வில்லை , 
  நல்  எண்ணங்கள் வழிகாட்டும் 
எதிர்கொள் துணையோடு 
நாளை உனதே ..!

கால்கள் கட்டுண்டால் 
கைகள் சிறகாக்கி 
கடவின்றி பறந்தோடு ,
இப்பாரும் உனதே .!

கல் வலியில் அழுதால்  சிலையும் உண்டோ ,
கலங்காதே 
காலம் கனியும் .!

விழுப்புண் இல்லா வீரனும் இல்லை 
  எழு ..! நட.! மீண்டும் .! பறந்தோடு