Wednesday, April 14, 2010

நான் - நீ

என் தோட்டத்து ரோஜா என்றாலும் ,
அதில் இத்தனை முட்கள் தான் ஏனோ ?
என் இதயம் உனக்கு தான் என்றாலும்
அதில் இத்தனை கீறல்கள் தான் ஏனோ ??
இந்த வலியும் சுகமாகிறது ,
உன் வாசத்துடன் துடிப்பதால்!!!!!

அழகு

வெண்மதி என்னை பார்த்து சிரித்தாள்
என் அழகை ரசிக்கிறாயா என்று ,
அவளை பார்த்து நான் சிரித்தேன்
நீ என் மஹாவை பார்த்ததில்லை என்று!!!!!

என் நட்சத்திரம்

மெய் மறந்து, மெய் இருட்டை
ரசித்து கொண்டிருந்தேன் .
விண்ணில் ஒரு நட்சத்திரம் குறைவதாய் தெரிந்தது,
மண்ணில் தேடினேன் கிடைக்கவில்லை,
இதோ கிடைத்துவிட்டது ,அது இருப்பதோ என் மனதில் !!!
- நீரு

கவி

உன்னை
கண்ட நாளே , நான்
கவிஞன் ஆகிவிட்டேன்!
இன்னும் காதலன் தான் ஆகவில்லை!!!!!!

ஓரினச்சேர்க்கை

மனதாலும் பிரிவில்லை,
பாலாலும் பிரிவில்லை,
வாழத்தான் முடியவில்லை,
வாழ்ந்தாலும் பயனில்லை,
இணைந்துவிட்டோம் மனதளவில்,
இவ்வுறவை புரிய வைத்தோம் பார் அளவில்.!!!!!!!!

என் கவிதை

உன் பெயரை தாளில் எழுதவும் பயமாய் இருக்கிறது ,
என் கவிதையை யாரேனும் படித்து விடுவார்களே என்று !!!