Saturday, January 9, 2010

இலங்கையில் தமிழர்கள்

உண்ண உணவில்லை ,
உடுத்த உடையில்லை ,
நிற்க நிலமில்லை ,
ஓட பலமில்லை ,

சொந்த நிலத்தில் அகதிகளாக நாங்கள் ,
வந்த இடத்தில் அரண்மனையில் நீங்கள் ,
இதுவன்றோ விதியின் விளையாட்டு ,
தயவுகூர்ந்து இந்த ஓலங்களை நிற்ப்பாட்டு..!!

ஊர்மிளா

சீதையின் கதை கேட்ட நீங்கள் ,
என் கதை ஏன் கேட்கவில்லை !!!!

பாவம் !!

தாயோ பட்டத்தை பறித்தால் ,
மகனோ பாதுகையை பறித்தான் ,
அந்தோ பாவம் தயரதன் குலம்..!!!

விலங்கியல் பூங்காவில் கணவன் !!

மான்கள் ஓடுவதை கண்டால்
பயமாய் இருக்கிறது
எனக்கு எப்போது
இராவணன் வருவானென்று !!!!

மன்னித்தது விடு அன்னையே !!

பாலுண்ட முலையதனில் கல்லென்று தெரிந்ததனால் ,
என் செய்வதென்று அறியாமல் ,
திக்கேதும் தெரியாமல் ,
முடங்கிப்போய் கிடக்கின்றேன்.!!
என் வாயின் நஞ்சதனால் ,
ஏதேனும் வந்ததுவோ !!
மன்னித்து விடு நீ என்னை ,
செய்நன்றி மறந்துவிட்டேன் ,,
என் செய்வதென்று நீயே சொல் .?
நீ என்னிடமே வந்துவிடு !!
என்னுடனே இருந்துவிடு!!!

ஈழக்கிழவன்

குழந்தையாக பிறந்து போது
ஆரம்பித்த அழுகை ,
இன்றுவரை நீடிக்கிறது !!!

தமிழனின் போராட்டங்கள்

* குடிக்கவே நீரில்லை
கொதிக்கவைக்க கொடுக்கிறான் காஸ் அடுப்பு !!!!

* சில அதிகாரிகள் லஞ்சத்தை தடுத்து
பல மக்களை லஞ்சம் வாங்க வைத்துவிட்டாயே - வாக்களிக்க

* கொடுத்த கலர் டிவியை எதில் பார்ப்பது ..?
மூடனே !!!
எடுத்து விட்டாயே மின்சாரத்தை ...!!!!

* இலவசமாய் தருகிறேன் என்று எங்கள் வரிப்பணத்தில் வாழும் உல்லாசவாதிகளே !!!
உங்களுக்கும் வருமா ஏதேனும் காய்ச்சல் !!!


Friday, January 8, 2010

திருப்தி

முப்பது ரூபாய் பொன்னி பணக்காரனுக்கு கொடுக்காததை ,
இரண்டு ரூபாய் ரேஷன் அரிசி கொடுத்தது ஏழைக்கு ..!!!!

பத்து சவரன் பொன்நகை மாமியாருக்கு கொடுக்காததை ,
பதுசான புன்னகை கொடுத்தது தாய்க்கு ..!!!

இருபது சென்டிமீட்டர் மழை ஆலமரத்துக்கு கொடுக்காததை ,
இளகிய பனிதுளி கொடுத்தது புல்லுக்கு ..!