Friday, January 22, 2016

வெற்றி

ஒளி மங்கிக்கொண்டிருக்கும் ஒரு மாலைப் பொழுது.. படபடப்பான நிலையில் அங்குமிங்கும் அலையும் வெண்ணிற தேவதைகள். கந்தல் ஆடைகளும் கலங்கிய கண்களுடன் அறை வாசலில்  சிலர், நன்றிகளை உதிர்த்து சிரித்து கொண்டு சிலர் . சற்றே புதியதாய் இருந்தது அனுபவம் . மனதினுள் ஒரு எதிர்பாரா பதற்றம். இதை செய்வதற்கும் கண்டிப்பாய் தைரியம் வேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்டான் .

எல்லாவற்றையும்  கண்டும் காணாததுமாய் வேகமாய் உள்ளே நுழைந்தான் அந்த இளைஞன் . நேராக வரவேற்பு மேசையில் சிடுசிடுவென புன்னைகைத்து, கூட்டத்தை ஏதோ பதில் கூறி அனுப்பிகொண்டிருந்த அந்த பெண்னிடம், தான் தேடி  வந்த  அறைக்கு வழிகேட்டன் அவன் .

சற்றும் எதிர்பார்த்திராத விதமாய் அவள் புன்னகைத்து நெளிவு சுளிவான வழியை கூறினால் . நன்றியுடன் அங்கிருந்து விலகி தான் கேட்டறிந்த அறைக்கு வந்துசேர்ந்தான் . காலணிகளை வெளியே கழற்றி , நீர் சற்று அருந்திவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். 

அவனை நோக்கி அவள் வந்தாள் . கைகளை நீட்டச்  சொல்லி , ஏதோ  செய்தாள். குண்டூசி அளவு குருதி வெளியேறியது போல் அவனுக்கு தோன்றியது . அவன் இருந்த மன நிலையில் அதை அவன் உணரவில்லை   அவன் தலையில் கை வைத்து , 'முதல் தடவையா . பதட்ட படாத . எல்லாம் ஒரு 15 நிமிஷம் தான், இங்கயே உக்காரு வந்துறேன்  ' எனக் கூறி சென்றாள் .

மீண்டும் சற்று நேரத்தில் வந்த அந்தப்பெண் , 'இங்க வா' என அவன் கையை பிடித்து அழைத்துச்சென்றாள் .
'இந்த பெட்ல படு . ரிலாக்ஸ் ஆகு ' , ஒன்னும் இல்ல இதலாம். முன்னாடி தான் எல்லாரும் பயப்படுவாங்க . இப்போலாம் ரொம்ப சகஜம் . எனக்கு தெரிஞ்ச நெறைய பேர்  டான்னு வராங்க . நீயும் அடுத்த தடவ ஓடி வருவா பாரு . பேசிக்கொண்டே மெல்ல முழுக்கை சட்டையின் கைகைளை மேலே ஏற்றிவிட்டாள் . 

தனக்கு  தெரிந்த கடவுள்கள் எல்லாரும் அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனர்.
டப் டப் டப் டப் .
அவள் சொன்னது போல் சரியாக பதினைந்து நிமிடத்திற்கு மேல் அங்கு வேலை இல்லை . மிகவும் நேர்த்தியாக செய்தவிட்டால்  அந்தப் பெண் . இனிமேல் எனக்கு பயமில்லை , தைரியமாக வருவேன் என கொடுக்கப்பட்ட பழரசத்தை குடித்துக்கொண்டே முடிவு செய்தான்.

மனதில் பெரிய சாதனை செய்து விட்டது போல் தோன்றியது

அருகில்  குளிரூட்டப்பட்ட அந்த மருத்துவ அறையில் ஒரு குரல்,'அம்மா வேணாம் மா , ஊசி குத்ரங்க மா உடம்புல பூரா, வலிக்குது ,  . கவலை படாத டா கண்ணா , எல்லாம் சீக்கரமா சரி ஆகிடும் , நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டேன் ' , அங்க பாரு ,அந்த  மாமா  இருக்கார் பாரு , அவர் தான் உனக்கு ஹெல்ப் பண்ணினவரு என்று அவனை கைக் காட்டி கூறிக்கொண்டிருந்தார் .

முதல் ரத்ததானம் .
வெற்றி ,
மனிதத்தின் வெற்றி