Monday, October 6, 2014

மின்வணிக மோகம் ..!

கிழமைக்கொன்றாய் வண்ணக்காலணி ,
உடன் ஜோடிக்கிளியாய் பதமானக் காலுறை ,
பாதவிரல் உரசும் மெல்லிய மெட்டி ,
கணுக்கால் அணைக்கும் வெள்ளிக்கொலுசு,
முழங்கால்வலிக்கு தென்னமரக்குடி எண்ணெய் ,
வீண்கொழுபடக்கும் மின்தொடைசுருக்கி ,
தீராப்பசி தீர்க்கும் வாச மிகு குறிஉறை,
சுழற்சி செலவாய் விடாய் அணையாடை ,
வண்துணி மேல் எட்டிப்பார்க்கும் ஒளிர்வு உள்ளாடை ,
கால்குழாய்களின் காவல், தோல் இடைவார் ,
உதரம் குறைய பல ஆயிரம் உண்ட கருவி,
காற்றினில் எப்போதும் மார் மறந்த துப்பட்டா,
தாய்ப்பால் மறக்கடிக்கும் போலி முலைப்புட்டி ,
விளம்பரங்களில் மட்டும் பெண்ணை மயக்கும் கமகம் ,
விரல்களின் முத்தங்களுடன் உறவாடும் கைப்பேசி ,
நினைவில் நில்லா வகை ஆயிரம் ஆரங்கள் ,
திரை நாயகன் போல் மயிர் மழிக்கும் சவரக்கத்தி ,
பயோரியா மறந்து பளபளக்க பற்பசை ,
வடிவங்கள் இவைதான் என வகுப்பெடுக்கும் காதணிகள் ,
கலர் பார்வை மறைக்கும் கருப்பு கண்ணாடி,
அமேசான் காட்டிலிருந்து அரிய வகை தைலம் ,
படித்து வேலைக்குப் போகும் தனக்கு அடங்கும் மணப்பெண் ,
லட்சங்களாய்  மேல்நாட்டினில் சம்பாதிக்கும் வயதாகா மணமகன் ,
குடும்பப்பாங்காய் விவாகரத்தான இரண்டாம்தாரங்களென,
உச்சி முதல் பாதம் வரை வீட்டிலியே விலைக்கு வாங்க ,
மின்வணிக மோகத்தினால் நாம் உழல்கின்றோமே ..!!

No comments:

Post a Comment