Tuesday, October 28, 2014

விழிகள் பேசும் மொழியில் - எனை சாய்த்தாளே .!

விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

இரவும் , பகலும்.
என் நிழல் போல் வந்தாயே .
இமை , நொடி,கணம்
உயிராய் பயணிப்போம்

விழியும் , இமையும் .
இணை பார்வையை போல் ஆவோம் .
கடல், அலை, மணல் ,சுழல்,
கலந்தோர் உயிராவோம்

தோள் சாய்கிறேன் , நிழல் காய்கிறேன் ,
நாம் சேரவே , நிதம் விழிக்கிறேன்

கனவோ , நனவோ
இருக்கட்டும் , நாம் இணைவது நடக்கட்டும்

முகிலும் நிலமகளும்
மழைத்துளியால் இணைவது போல்

உன்னோடு பயணிக்க ,
தடமெல்லாம் பிழைசெய்து
நடப்பதுவும் அறியாமல்
உன்னுடனே நிற்பதுவோ .

நான் போகும் சாலைகள் ,
நாமாக தெரிகிறதே ,
பயின்றது உன்னுடன் தான் ,
என்பது தான் காரணமோ .

இருவிழிகளில் பேசிய ரகசிய கவிதைகள்
இதயத்துள் கசிந்ததுவோ ,
என் மனதினில் வருடிய அழகிய பனித்துளி
அடிவேரினை சேர்ந்ததுவோ

கைக்கோர்த்த நினைவெல்லாம் ,
சலனங்கள் அழியாதோ .

உன்னுடன் இருக்கையில் பெண்மையை மறக்கிறேன் ,
நிதம் நிதம் தவிக்கிறேன் .

வெயிலும் மழையும்
இணை வானவில் போலாவோம்
எனை உனை கரம் மனம்
ஒன்றினில் ஒன்றாவோம்

பிழை செய்கிறேன் , உனை ரசிக்கிறேன் ,
நட்பிலே துளி விஷம் கலக்கிறேன் .

மலரும் முள்ளும்
சார்ந்தே இருப்பது போலே ..!


விழிகள் பேசும் மொழியில் நானே
புது கவிதை ஆகின்றேன் .!
கவிதையில் பார்த்த பொய்கள் உன்னில்
தானே மெய்யாய் காண்கின்றேன் ..!

No comments:

Post a Comment