Saturday, October 10, 2015

கோவில் இருக்கிறது

 கற்சிலைகளை மறைத்த வர்ணச்/மெழுகுச்சிலைகள் தான் இன்றைய கடவுள்களின் பிம்பம் .
எப்படி இருக்கும் நம் கோவில்கள் ? நாம் சிறிது பின் நோக்கியே செல்லவேண்டியுள்ளது . பண்டைய கோவில்கள்    (கி .பி .2000ஆம் ஆண்டுக்கு முன்னர்)  கம்பீரமான கோபுரம், பனை உயர மதில்கள்,பறந்து விரிந்த மாடவீதிகள், விசாலமான பிரகாரங்கள் , அமைதியான கருவறை இப்படி தான் இருக்கும் என்று ஒரு கற்பனை செய்தி படித்ததாய் நினைவு. அதிலே ஆத்மார்த்தமாய் கடவுளுடன் நாம், அழகான உள்ளுணர்வு , அறுசுவை பிரசாதம் இவை இருந்திருக்கும் . அப்படி ஒரு கோவிலுக்கு செல்லப்போகிறோம் என நினைத்து தான் நானும் என் சகாவும் அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் கண்ணணை சரணடைய சென்றோம்.பறந்து விரிந்த ஓர் ஏரியின் ஓரத்தில் பணக்குவியலில் கட்டப்பட்ட பளிங்கு மாளிகையை அடைந்தோம், வாயிலே  தெரியாத அளவு வாகணங்கள் குவிந்து கிடந்தன . மகிழுந்து அணிவரிசையால் வியப்பில் அண்ணலை, கண்ணனை  மறந்து பளபளக்கும் வண்டி ஜன்னலில் தங்களையே பார்த்து மயங்கி இருந்தனர் பலர் . வழி மாறிவிட்டோம் என்றே முடிவு செய்த பொழுது "ஆள் உயர தாடியுடன் சிலரும் , அம்மா அய்யா  தர்மம் போடுங்க என்ற குரலும் " கண்டிப்பாய் கோவில் அருகில் உள்ளது என  உறுதி செய்தது .

No comments:

Post a Comment