Friday, September 23, 2016

சைத்தான்

சமீப காலமாக கற்பனைத்திறனும் கலைத்திறனும் திரையுலகில் இருப்போருக்கு குறைவாக இருப்பதாலோ , எங்கிருந்து எதைத் திருடுவது என்று அறியாமல் சகட்டு மேனிக்கு காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மறந்து போய் தன்னுடைய பழைய பாட்டின் தாளத்தையே போடுகிறார். மறந்ததே போயும் ஆங்கில , ஜப்பானிய படங்களை தமிழில் எடுத்துவிடுகின்றனர் பாவம் .
சரி, விஷயத்துக்கு வருவோம், இரண்டுநாட்கள் முன்னர் வெளிவந்த விஜய் அன்டனியின் சைத்தான் திரைப்பட ட்ரைலர் வந்தது . அதை பற்றி இப்போது வாட்ஸாப்பில் ஒரு குறும்செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அந்த ட்ரைலரின் பின்னணி இசை தைத்திரீய உபநிஷத் ஒலிக்கும் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளது . போதாக்குறைக்கு என்ன வார்த்தை போடவேண்டும் என தெரியாமல் சைத்தானே என விஷ்ணுவுக்கு பின்னர் அவர் சொருகியிருக்கிறார். இதனால் பரம்பொருளை ஷைத்தானோடு ஒப்பிட்டு மத நம்பிக்கையை கிண்டல் செய்வதாக அந்த பதிவு கூறுகிறது.
கண்டிப்பாக காக்கும் கடவுளையும் , அழிக்கும் சைத்தானையும் ஒன்றாய் கூறுவது தவறு . இதில் இந்து மத நம்பிக்கையாளர்கள் மனம் புண்படலாம் . ஆனால் , இதெல்லாம் உண்மையாகவே நம்மில் பலருக்கு தெரியாது. யாரோ உண்மையாகவே மனம்புண்பட்ட ஒருவர் புலம்பியதை , நாமும் எல்லோருடனும் பகிர்கிறோம் . இவர் காப்பியடிக்காத இசையே இல்லை . கேட்டுவிட்டு அமைதியாக , ஒரு சராசரி தமிழன் எல்லாப் பிரச்சனைகளிலும் என்ன செய்வானோ அதைப் போல் விலகிச் சென்றுவிடலாம் அல்லது சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்ளலாம் .
திரையுலகம் நம் மதங்களை(இந்து , இஸ்லாம் , கிறித்துவம்) தன் இஷ்டம்போல் தொடர்ந்து சித்தரித்து வருகின்றது. இது போல ஒவ்வொரு படங்களிலும் தன் இஷ்டப்படி செய்கிறது. பிரபல இந்தி நாயகன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நாயகியை முன்னூறு படிகளுக்கு தூக்கிச்செல்லவேண்டும் என்று கூறி, தூக்கியும் செல்வார். இல்லாத கற்பனை வழக்கம் நம் சமயத்தை அசிங்கப் படுத்தவில்லையா ? மலை உச்சியில் கிராபிக்ஸில் பெருமாளையும், சந்நிதிக்கு எதிரே மயிலையும் , பட்டை போட்ட குருக்களையும் கட்டியிருப்பார்கள் . இதெல்லாம் உச்ச கட்ட அபத்தம். படம் முழுக்க பெண் வீட்டார் தமிழர் என்பதால் ஆழ்வார்களும் , நாயன்மார்களும் , அண்ணாவும் பெரியாரும் காப்பாற்றிய தமிழை இஷ்டத்துக்கு கொச்சைப் படுத்தியிருப்பார்கள். வலிக்கவில்லையா ?
இப்பாடலில் மனது வருந்தியவர்கள் ஏன் சிலவருடங்கள் முன் மதம் மாறிய யுவன் சங்கர் ராஜாவின் பாடலை பற்றி வருந்தவில்லை ? " கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா பாடலை, தன வசதிக்காக ஓ ஈசா , என் ஈசா என்று மாற்றிக்கொண்டாரே ? ஒருவேளை ஓர் மதத்துக்குள் கடவுள்களை மாற்றியதால் மறந்தோமா ? அதற்கு பின்னர் வரும் ஆங்கில வரிகள் ஆபாசம் இருக்குமே ? அது .
தசாவதாரம் படத்தில் அழகியசிங்கர் தெரியுமா எனக் கேட்கும் காட்சியில் பகுத்தறிவு நாயகன் கிண்டலாக மடோன்னா வா எனக் கேட்பார். கவர்ச்சி நாயகியும் , பரம ஆச்சார்ய ஸ்ரேஷ்டரையும் ஒப்பிடுவது சரியா ? விஸ்வரூபம் படத்தில் குரானை கூறி தீவிரவாதியை அழிக்கும் கட்சிக்கு எவ்வளவு பெரிய சர்ச்சை நடந்தது ? இதுபோல் இந்து வழக்கங்கள் கிண்டல் செய்யப்பட்டால் கண்டிப்பாக நடக்காது .
ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செய்யப்படும் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படமாட்டாது என்பது நிதர்சன உண்மை. சாதிகளுக்கு அப்பாற்பட்டு இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் முன்னாள் முதல்வர் கலைஞரும் கடைசி காலத்தில் ராமாநுச காவியம் படைத்ததை யாரும் மறுக்க இயலாது . சமயங்களை கிண்டல் செய்து பிழைக்கும் ஒரு சாரார் இருந்துகொன்டே தான் இருப்பர். இது போன்ற கேலியும், கிண்டலும், சுரண்டலும் மதங்களை , அதன் மடங்களை வலுப்பெறச்செய்கிறது , அதற்கும் மேல் ஒருதலைமுறை ஆதரவாளர்களை கடந்து அடுத்த தலைமுறை வெறியர்களை தூண்டுகிறது.
மனம் வருந்துவோரை நினைக்கையில், ஒரு உபன்யாசத்தில் கேட்ட கதை நினைவுக்கு வருகிறது. தன் வாழ்நாளில் எந்த ஒரு நல்லகாரியமும் செய்யாமல் இறக்கும் தருவாயில் இருந்த ஒரு தந்தை கூறிய கடைசி வார்த்தை தன் மகனின் பெயர் "நாராயணா". இதனால் பரமாத்மா கிருஷ்ணர் யமதூதர்களை விளக்கி அவனை விஷ்ணுலோகம் அழைத்துச் சென்றாராம்.
எத்தனையோ தடைகளை தாண்டி சனாதன தர்மம் தழைத்தோங்குகிறது. இதுவும் கடந்து செல்லும். இந்த சைத்தானை நாம் மறப்போம் , கடவுள் மன்னிப்பார்

No comments:

Post a Comment