Tuesday, March 22, 2016

இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்

உண்டமயக்கதிலிருந்து தப்பிக்க  இணையத்தில் செய்திகளை வாசிக்கலாம் என தொலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது , ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .. பத்துக்கும் மேற்பட்டோர் ஐரோப்பாவில் குண்டு வெடித்து இறந்தனர் என செய்தி கண்முன்னே பளிச்சிட்டது .

மனம் ஒரு நொடி கணத்தே போனது . என்ன தான் கிடைக்கிறது பிறர் அழிவினில் நமக்கென்று புலம்பிக்கொண்டே இன்றைய தமிழ் நாள்காட்டியை நோக்கினேன் . ஒருநொடி வண்ணத்துப்பூச்சி வளைவோ இதென தோன்றியது .

இதே நாள் நம் பழங்காலத் தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகைகளுள் ஒன்றாக காமன் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனை சிவன் எரித்த கதை இன்றும் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் ஆண்டுதோறும் காமன் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் தவம் புரியும் இடத்தை அடைந்த காமன் அவரை வணங்கினான். சிவபெருமான் மெளனமாக இருக்கக் கண்டு,அவர் மேல் தன் மாயக்கணைகளை தொடுத்தான் .. இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[

இதைக்கண்ட மன்மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார்.

கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்த நாள்  தான் காமன்தகனம் என கொண்டாடப்படுகிறது .

 “வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும்
பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” எனும்  இளங்கோ அடிகளின் வார்த்தைகள் நினைவுக்கு  வந்தது.

யுகங்கள் தாண்டியும், கண்டங்கள் கடந்தும் ஒரே நாளில் தகனம் நடக்கின்றதோ என யானைக்கும் பூனைக்கும் முடிச்சு போட்டுவிட எனக்கு மனம் தான் வரவில்லை .

உலக தண்ணீர் தினத்தினில் ,
செந்நீர் குளங்கள் .
#இன்றைய தேதியும் , இன்றைய வரலாறும்
#காமன்தகனம் #பெல்ஜிய குண்டுவெடிப்பு

No comments:

Post a Comment