Friday, August 19, 2016

கங்கையே அருள்வாயே

கங்கை ,
பாரதத்தின் ஆயுள்ரேகை
தாயே உன் கரைகளில் இரு கரங்களை நாம் கூப்பினோம் ,
புனிதமாய தெளிநீரை நாங்களும் பருகினோம் ,
கார்முகில் கண்ணனின் பேர் சொல்லி , கலங்கலான எம்மனதின் கவலைகளை தீர்ப்பாயே .!
மேலுலகு செல்ல ஏணியும் நீயே, மாந்தரின் அகவிருள் போக்குவாயே .!
அலைகளாய் துள்ளியோடும் நங்கையே ,
எம் தாய் கங்கையே .!!
அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
தூய்மையான உன் மடியின் நிழலில் , நிலமும் கூட சொர்கமே,
புரிந்துகொண்டோம் நுரைகள் கூட நிரம்பி வழியும் உன் காதலே ,
உடல்தனை நீ அணைக்கையில் உள் மனமும் தன் மலம் விளக்குதே,
உன் ஸ்பரிசம் நுகரும் சிறுப்புல்லும் கூட புதிய உயிராய் பிறக்குதே ,
சுமந்து வந்த பாவமெல்லாம் கரைக்கிறோம் உன் மடியிலே ,
சிரித்து நீயும் அணைத்துக்கொண்டு ஆட்கொண்டதெம்மை அன்பிலே ,
அமுதின் சுவையும் அறிந்துவிட்டோம் பருகிக் களித்த உன் நீரிலே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..! அருள்வாயே ..!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
வணங்குகிறோம் கங்கையே .! அருள்வாயே ..!
கறைபடிந்த உன் கரைகள் , உன் விழி திரை நீர் நுரைகள்,
விரைகிறோம் அதை போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
எங்கள் தாயினும் மேலான உன்னை ,கடமையது நாங்கள் காக்க,
விரைகிறோம் உன் கவலைகள் போக்க , உன் பிள்ளைகள் நாங்கள் .!
வணங்குகிறோம் கங்கையே .! வணங்குகிறோம் கங்கையே .!
வணங்குகிறோம் தாயே .! வணங்குகிறோம் உனையே .!
அருள்வாயே ..! அருள்வாயே ..!

No comments:

Post a Comment