Sunday, February 19, 2017

வசீகரம்/கவர்ச்சி

அமைதியான அந்த இரவு
ஏதோ ஒரு காவுக்காய் காத்திருக்கிறது ,
யாரையேனும் புதிதாக இன்று வேட்டையாடலாமா
என யோசித்திருக்கையில் ,
அவள் வருகிறாள் .
இன்றும் அதே உணவா என நினைத்து
மனம் சோம்புகிறது இருட்டில் ஒளிந்திருக்கும் அந்த மிருகம்.
சிறுகுழந்தையாய் இருக்கும் போது
பெண் மரப்பாச்சிகளுடன்
விளையாடிய அந்த ஆண் மிருகம் ,
தான் வளர்ந்தாலும் வளராத பக்கத்து
வீட்டுக் குழந்தையுடன் விளையாடி,
பேருந்து நெரிசல்களில் அவள் ப்ருஷ்டங்கள்
தேடி  சிசினமுரசி  , வலைப்பூக்களில்
ஆடை களையப்பட்ட நாயகிகளின்
முலைகளில் இன்பம் கண்டு ,
ஐம்பதுக்கும் நூறுக்கும் நெடுஞ்சாலைப்
புதர்களில் சில நிமிடப்  பசியாறி ,
மெதுவாக நகரத்தின் உள்ளே
வந்து இப்போது மரத்தின்
பின்னே நின்றுகொண்டிருக்கிறது .
மரபுவழியுடையணிந்தவளை எடைபோடுகிறது.
 ஐந்தரை அடிக்காரி அவளின்
ஆறு  கஜப்புடவையையும் தாண்டி ,
கண்மூடி அவள் உள்ளங்கியை
மனதில் களைந்து நச்சுக்கொட்டி ,
கண் திறந்து அவளை பற்றப்
பாய்கிற அந்த மிருகம்,
 சுருண்டு சடாரென்று
தரையில் வலியில் புரள்கிறது,
மனிதமிருகத்தின் சதைக்கறியை
ருசித்த தெருநாய்கள்  வாயில் எச்சில் சொட்ட திரும்பி ஓட,
இவன் பார்த்தக் கவர்ச்சிக்கன்னி ஓடிவந்து சொல்கிறாள் ,
"அண்ணா , என்ன ஆயிற்று
இதோ  திரிவூர்தியை அழைக்கிறேன் என்று "
மிருகம் உயிர்ப்பிணமாக அந்த
வசீகரத்தொடைகளில் சாய்கிறது 

No comments:

Post a Comment