Sunday, February 19, 2017

நகல்

மெல்லிய நாற்பது வாட் மின் குமிழ்விளக்கின் 
வெளிச்சம் தான் அங்கு , 
ஐம்பதுக்கு ஐம்பது சதுரடி அறை, 
அவளெப்போதும் அந்த அறையினுள் தான் , 
வடமேற்கு மூலையில் கிடப்பாள் 
திரைச்சீலையிடப்பட்ட அந்த ஓரத்தில் மெலிதான காற்றுக்காய் 
தளிகைவிசிறி ஓடிக்கொண்டிருக்க 
அன்று அவன் வருகிறான்,
சிலநாள் முன்னே மலர்ந்த சாம்பல் நிறத்து மொட்டிவள், 
அவன் வெளிர்த்தோற்றத்தையும் ,
கருமையான சுருட்டைமயிரையும் பார்த்து பல்லிளிக்க ,
அவன் மெதுவாக இவளை நோக்கி நெருங்கினான்.
அவன் தேகம் அவளின் மேல் அணைக்கையில் ,
வெட்கப்  புன்னகை பளிச்சென 
குறுக்கும்நெடுக்குமாய் தெறித்தன ,
வண்ணங்கள் அவளூடே கரைந்து 
கருப்புவெள்ளையாய் மாற முற்பட்டன.
சிலநிமிட சல்லாபத்தின் முடிவில் 
அந்த வீரியத்தின் நகல்கள் 
ரெண்டாகவோ , நான்காகவோ .
எச்சமாய் கீழே ..!!

No comments:

Post a Comment