Sunday, February 19, 2017

நாளொன்று போவதற்குள்

நாளொன்று போவதற்குள் ,
  நான்பட்ட பாடனைத்தும் ..!
தெரியாதோ ,  கார்முகிலே ,
  கடற்கரையை , கருவிழியே .!

ஆண் :

மேகம் சிவந்து கண்ண கசக்குது , அடியே .!!
உன் முகமோ அதுவே ,
என்னடி என் மேல் கோவம்,
சேர்ந்தே இத கடந்து போவோம் ..!!

( கார்முகிலே , கடற்கரையை , கீற்றொளியே , கருவிழியே .!)

பெண்:

நம் காதல் கண்களின் நீரும், அது தான்
சிலிர்க்கும் மழை துளியே ,
உன்மேல் எனக்கேன் கோவம் ,
மழைநீரின் குளிர்ச்சியை பார் புரியும் .!

( கார்முகிலே , கடற்கரையை , கருங்குயிலே , கருவிழியே .!)

 ஆண் :

நுனிப்புல்லாய்  ஆடித் திரிந்தேன் , பெண்ணே
உன் மூச்சின் சுவாசம் ,
எனை ஆட்டிய ஆட்டம் ,
ஒவ்வொரு நொடியும் பாடாய் படுத்தும் .


பெண் :

எப்புயலும் உனை களைந்திடவில்லை , அடடா
நம் காதலின் வீரம்  ,
உனை தாங்கிய  தாரம் ,
தினம் உடனிருந்தாயே உனக்கே தெரியும் .!!

நிலையில்லா பருவம் போல் , மனமே ,
நினைக்குது உனை தினமே ,
உண்ணலும் உண்ணேன்,
யான் நீ இல்லா வாழலும் வாழேன்..!!

( கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!)

ஆண் :

நாழிகைகள் நின்றதடி சிந்தித்தேன் , யாரால்
என்னவளே உன்னால் ,
கடல் மணல் அணையிது ,
கரையும் அது கடந்தால் தெரியும் .

நாளொன்று போவதற்குள் ,
   நான்பட்ட பாடனைத்தும் ..!
அறிவீரே ,  கார்முகிலே , கடற்கரையை , கண்ணொளியே , கருவிழியே .!

No comments:

Post a Comment