Tuesday, February 14, 2012

கேட்டால் கொடுத்த பூமி(1)

இருட்டு என்றாய் ஆதவன் கொடுத்தேன்,
    வெயில் என்றாய் வனங்களை கொடுத்தேன்,

தாகம் என்றாய் நதிகளை கொடுத்தேன்,
   தனிமை என்றாய் உடன் மற்றினங்களை கொடுத்தேன்,

சிந்தனை என்றாய் ஞானம் கொடுத்தேன்
  மறதி என்றாய் விஞ்ஞானம் கொடுத்தேன்,

ஞானம் வளரவும் , ஞாலம் பெருகவும் ,
கொடுத்ததை எல்லாம் முற்றுமாய்க் கெடுத்தாய்,

செய்வது சரியா எனக் கடல் சீற்றமாய்க் கேட்டேன் ,
நான் 'மனிதன்' என்றே உரக்கச் சொன்னாய்,

நன்றி மறப்பவன் மனிதன் என்பது அனைவரும் அறிந்தக் காலச்சுவடு.
பூமியை மட்டும் பூமியாய் வாழ, மறந்தே போயும் சிறிதாய் வழிவிடு :(

No comments:

Post a Comment