Wednesday, February 15, 2012

நிறை


கண்முன்னே ஆடும் பல வண்ணத்திரைகள்,

மிரட்சியோடு ஓடும் மனக்கற்பனைக் குதிரைகள்,

அடங்காமல் கரைமோதும் நீலக்கடல் நுரைகள்,

கண்சிமிட்டும் நேரம் தனில் அவள் கார்குழலில் நரைகள்,

கை அளவன்றோ என் ஆயுட்குறைகள்,

உலகளவன்றோ நம் வாழ்வில் நிறைகள்

குறை மறந்து நிறை நினைத்தால் நீளும் நம் வாழ்நாட்கள்..!


 

No comments:

Post a Comment