Tuesday, February 14, 2012

தாராளத் தமிழன்

தவிக்கிறேன் நான் தாராள தமிழன் ,

வடபுறம் கைகூப்பிக் கிருஷ்ணாவில் நீர்க்கேட்டேன்,
கண்ணன் அவன் கருமையில் கொடிகாட்டிக் கைவிரித்தனர்,


கிழக்கின் எதிர்த்திசையில் காவிரியில் கையேந்தினேன்,
வருணன் பொய்த்தப்பின் கடனாய்த துளி அளித்தனர் ,

தெற்கே முல்லையின் பெரியாற்றில் செருக்காய் சிரித்திருந்தேன்,
முள் வெளித் தடுப்பணையால் சிற்றாறாய் சிறகொடித்தனர்,

வங்கக்கடல் நோக்கி ஈழத்தின் திசைப் பார்த்தேன்,
செங்கடல் குருதியின் நாற்றம் நான் நுகர்ந்தேன்.

நீர் மறந்து மேல் நோக்கி கடவுளின் பால் கை சேர்த்தேன், கீழ்நோக்கி மிதக்கிறேன் ஒரு வழியாய் கானல் நீர் கண் பட்டதனால்..!

No comments:

Post a Comment